tamilni 111 scaled
இலங்கைசெய்திகள்

மோசடியான முறையில் டுபாய்க்கு சென்ற இலங்கையர்கள் நிர்க்கதி

Share

மோசடியான முறையில் டுபாய்க்கு சென்ற இலங்கையர்கள் நிர்க்கதி

வாகன சாரதி தொழிலுக்கு தகுதியில்லாத சிலர், வாடகை சிற்றூந்து நிறுவனமொன்றில் சாரதிகளாக சேரும் வகையில் மோசடியான முறையில் டுபாய்க்கு சென்று நிர்க்கதியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அங்கு வாகன சாரதி பரீட்சையில் சித்தியடைய முடியாமல் அவர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

200 இலங்கையர்கள் இந்த மோசடி முறையின் கீழ் டுபாய் சென்றுள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குழுவில் உள்ள சிலர் தேவையான திறன்கள் இல்லாமல் மோசடியாக அங்கு சென்றுள்ளனர். இன்னும் சிலர் சாரதி தேர்வில் தேவையான திறமைகளை பெற்றிருந்தும் டுபாயில் தோல்வியடைந்தனர்.

அதேநேரம் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் திரும்பி வர விரும்புகிறார்கள் என்று கூறிய அமைச்சர் அவர்களை திரும்ப அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...