புதிய முறைமை அறிமுகம்! தகுதியானவர்களுக்கு கொடுப்பனவுகள்
இலங்கைசெய்திகள்

புதிய முறைமை அறிமுகம்! தகுதியானவர்களுக்கு கொடுப்பனவுகள்

Share

புதிய முறைமை அறிமுகம்! தகுதியானவர்களுக்கு கொடுப்பனவுகள்

அரசியல்வாதிகள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்கு இணங்க நிவாரணங்களை வழங்கிய முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.

வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வரும் போது பணம் படைத்த தரப்பினரே, இதற்கு எதிராக செயற்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு அரசியல் கட்சிகளினதும் அல்லது நபர்களினதும் விருப்பத்திற்கு ஏற்பவே கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இந்த முறைமையை நாம் முற்றாக நீக்கியுள்ளோம். 25 வருடங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த முறைமையை மாற்றி புதிய முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இதில் குறைபாடுகள் இல்லாமலில்லை. எனினும் அந்த குறைபாடுகளை நீக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதுமாத்திரமின்றி நலன்புரி கொடுப்பனவுகள் கிடைக்க வேண்டிய தகுதியானவர்களுக்கு இதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சமுர்த்தி திட்டத்தை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் ஒரு போதும் நடவடிக்கை எடுக்காது.

சமுர்த்தி திட்டமானது வறுமை நிலையிலிருந்து மக்களை மீட்பதற்கான விரவிான செயற்திட்டமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...