வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்!
இலங்கைசெய்திகள்

வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்!

Share

வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்!

இலங்கையில் பல பகுதிகளில் சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“அஸ்வெசும” நலன்புரி வேலைத்திட்டத்தின் மூலம் கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வருவதுடன், கொடுப்பனவுகள் பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் ஜனாதிபதி அலுவலகம் முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இத்திட்டத்தில் பலர் நிராகரிக்கப்பட்டிருந்த காரணத்தால் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்கப்பட்டு நியாயமான முறையில் பயனாளிகளை உள்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.

முதற்கட்டமாக பயனாளிகளுக்கு விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

பின்பு அவர்களின் தகவல்களை சரிபார்ப்பதற்காக வீடுகளுக்குச் சென்று தரவு சேகரிப்பு செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து மேன்முறையீடுகள் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இவ்வாறான சூழலில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் நன்மையை பெறுவதற்குத் தேவையான வங்கிக் கணக்குகளை திறப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் தற்போது நீண்ட வரிசைகளை காண முடிவதாக கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...