வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்!
இலங்கைசெய்திகள்

வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்!

Share

வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்!

இலங்கையில் பல பகுதிகளில் சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“அஸ்வெசும” நலன்புரி வேலைத்திட்டத்தின் மூலம் கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வருவதுடன், கொடுப்பனவுகள் பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும் ஜனாதிபதி அலுவலகம் முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இத்திட்டத்தில் பலர் நிராகரிக்கப்பட்டிருந்த காரணத்தால் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்கப்பட்டு நியாயமான முறையில் பயனாளிகளை உள்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.

முதற்கட்டமாக பயனாளிகளுக்கு விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

பின்பு அவர்களின் தகவல்களை சரிபார்ப்பதற்காக வீடுகளுக்குச் சென்று தரவு சேகரிப்பு செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து மேன்முறையீடுகள் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இவ்வாறான சூழலில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் நன்மையை பெறுவதற்குத் தேவையான வங்கிக் கணக்குகளை திறப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் தற்போது நீண்ட வரிசைகளை காண முடிவதாக கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...