19 8
இலங்கைசெய்திகள்

திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு சிக்கல்: கைது செய்ய நடவடிக்கை

Share

திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு சிக்கல்: கைது செய்ய நடவடிக்கை

வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் திருமணம் செய்து கொண்ட தம்பதியரின் Pre-shoot புகைப்படம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தம்பதியினர் தலதா மாளிகையில் உள்ள ஹெவிசி மண்டபம், அம்பராவ உள்ளிட்ட பல இடங்களில் இருந்து இந்த புகைப்படங்களை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தலதா மாளிகையில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்ற தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தம்பதியினரையும் புகைப்படக் கலைஞர்களையும் கண்டிக்கு இன்றைய தினம் வரவழைத்து அவர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த புகைப்படம் எடுத்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...