செய்திகள்இலங்கை

காரைநகரில் திருமண கொண்டாட்டம் – ‘PHI’ மீது தாக்குதல்

pcr
Share

காரைநகரில் திருமண கொண்டாட்டம் – ‘PHI’ மீது தாக்குதல்

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவானோருடன் நடைபெற்ற திருமண நிகழ்வு தொடர்பில் நடவடிக்கை எடுக்கச் சென்றபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் காரைநகரில் நூற்றுக்கும் மேற்மேற்பட்டவர்களுடன் நடைபெற்ற திருமண நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களை சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தியதோடு அவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ள சென்ற சிலர், பி,சி.ஆர். உபகரணங்களை வீசி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமையை தொடர்ந்து பொலிஸார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை கைதுசெய்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...