24 6635f99a8d114
இலங்கைசெய்திகள்

கொழும்பு உட்பட பல பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

Share

கொழும்பு உட்பட பல பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் உள்ள கடற்பரப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கடற்பரப்புக்களில் இன்றையதினம் கடல் அலை மேலெழக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டியில் இருந்து கொழும்பு(Colombo), காலி(Galle) மற்றும் ஹம்பாந்தோட்டை(Hambandota) ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புக்களில் இவ்வாறு கடல் அலை மேலெழக் கூடும் என்றும் இதன் காரணமாக அவதானமாக செயற்படுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த கடற்பரப்பில் 2.5 மீற்றர் முதல் 3 மீற்றர் வரையான உயரத்திற்கு கடல் அலை மேலெழக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களத்தில் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வார இறுதி நாட்கள் என்பதால் பெரும்பாலான மக்கள் கடற்கரைகளில் உலாவுவதற்கு செல்கின்றனர்.

மேலும், நிலவும் கடும் வெப்பமான கால நிலை காரணமாகவும் கடற்கரைக்குச் செல்வதும், நீராடுவதற்காகவும் செல்லும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

அத்துடன் பாடசாலை விடுமுறை காலம் என்பதனாலும், சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு நீராடச் செல்லும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடல் அலை மேலெழும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரைக்குச் செல்லும் போது அவதானமாக செயற்படுவதுடன் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...