Rajitha Senaratne.jpg
அரசியல்இலங்கைசெய்திகள்

தலைமைத்துவம் தேவைப்படும் போது வழங்குவோம்! – கூறுகிறார் ராஜித

Share

” தன்னெழுச்சியாக போராடும் இளைஞர்கள் இனவாதத்தை நிராகரிக்கின்றனர். மதவாதத்தை வெறுக்கின்றனர். இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்க இது சிறந்த ஆரம்பமாகும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இனவாதமும், மதவாதமும்தான் இந்நாட்டுக்கு சாபக்கேடாக இருந்தது. இவற்றை தூண்டிய பிக்குகளை மக்கள் இன்று நிராகரிக்கின்றனர். அதுமட்டுமல்ல நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடுகின்றனர். இது சிறந்த விடயமாகும். தன்னெழுச்சியான போராட்டத்துக்கு ஏதேனும் ஒரு கட்டத்தில் அரசியல் தலைமைத்துவம் தேவைப்படும். அதனை நாம் வழங்குவோம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். விருப்பு வாக்கு தேர்தல் முறைமையும் மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் இந்நாட்டில் அரசியல் மறுசீரமைப்பு இடம்பெறும்.” – என்றார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....