sajith 5
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனநாயக வழியில் ஆட்சி மாற்றம் வேண்டும்! – சஜித் வலியுறுத்து

Share

“நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்தை வரவேற்கின்றோம். இந்த ஆட்சி மாற்றம் மக்கள் ஆணையுடன் ஜனநாயக வழியில் இடம்பெற வேண்டும். அதற்காக ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் விரைந்து நடத்தப்பட வேண்டும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண வேண்டுமெனில் ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்தை நாம் வரவேற்கின்றோம். எமது கட்சியினதும் நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது.

தற்போதைய ஆட்சியில் சூதாட்ட அரசியல் சூடுபிடித்துள்ளது. இது நாட்டுக்குக் கேவலமானது. அதேவேளை, இந்த ஆட்சியால் நாள்தோறும் வீதிகளில் வரிசைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அனைத்துப் பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலையும் நாள்தோறும் சடுதியாக உயர்வடைந்து வருகின்றது. மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால்தான் எமது நாடு மீண்டெழ சர்வதேசம் கைகொடுக்கும். இந்த அராஜக ஆட்சி தொடர்ந்தால் அதாள பாதாளத்தில் விழுந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்த முடியாது. எனவே, ஆட்சி மாற்றம் உடன் அவசியம்.

ஆட்சி மாற்றம் மக்கள் ஆணையுடன் ஜனநாயக வழியில் இடம்பெற வேண்டும். அதற்காக ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் விரைந்து நடத்தப்பட வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...