tamilnih 9 scaled
இலங்கைசெய்திகள்

தண்ணீர் தேவை அதிகரிப்பு: தடைப்பட்டுள்ள நீர் விநியோகம்

Share

தண்ணீர் தேவை அதிகரிப்பு: தடைப்பட்டுள்ள நீர் விநியோகம்

தினசரி தண்ணீர் தேவை பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுவாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீர் வழங்கல் தொடர்பான முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அதிகபட்ச கொள்ளளவிற்கு தண்ணீர் விடப்பட்டாலும், தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் சில நுகர்வோருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

தினசரி தண்ணீர் தேவை பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அத்துடன் தற்போதைய நிலவரத்தில் சில பகுதி மக்களுக்கும், நீர் வழங்கல் திட்டங்களின் முடிவில் உள்ள மக்களுக்கும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து நீர் வழங்கல் அமைப்புகளும் இந்த நாட்களில் எவ்வித பிரச்சினையும் இன்றி இயங்கி வருகின்றன. மேலும், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையிடம் இன்னும் ஒரு மாதத்திற்கு போதுமான நீர் கொள்ளளவு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...