பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து பொருட்களை திருடும் மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளத.
அந்தவகையில், இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்ட சந்தே ஒருவரை கட்டுநாயக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடமிருந்து 4 போதை மாத்திரைகள் மற்றும் தங்க ஆபரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
ஆகவே, பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் அவதான இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
Leave a comment