tamilni 13 scaled
இலங்கைசெய்திகள்

வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

Share

வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

வர்த்தகர்கள் சிலர் வாகன உரிமையாளர்களை ஏமாற்றி பல்வேறு தரக்குறைவான பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

வர்த்தகர்களை இலக்கு வைத்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல இதனை தெரிவித்துள்ளார்.

எமது நாட்டை பொறுத்த வரையில் அதிகமானோர் கார் அல்லது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லூப்ரிகண்டுகள் அல்லது கிரீஸ் வகைகள் குறித்து நுகர்வோருக்கு தெளிவற்ற நிலை காணப்படுகின்றது.

இது தொடர்பான அரச அறிக்கையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. “தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தும் மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றது.

மேலும், கிரீஸ் கலந்த மாவு உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. இவை குறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வு இல்லை. இதுபோன்ற பல பிரச்சினைகளை நுகர்வோர் உணர்ந்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...