rtjyd 1 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Share

இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் இந்நாட்களில் டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, பல்வேறு சுவாச நோய்கள் மற்றும் காய்ச்சல் வைரஸ்கள் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பரவி வரும் சில சுவாச நோய் வைரஸ்களினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமும் ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும், இருமலுடன் கூடிய டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் காணப்படுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மருத்துவர் ஆஷா சமரநாயக்க, டெங்கு நோயாளர்களுக்கு சிறிதளவு இருமல், தொண்டையில் அசௌகரியம், சில சமயங்களில் மூக்கில் சளியுடன் கூடிய அசௌகரியம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கின்றார்.

இதன் காரணமாக சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு டெங்குவும் இருக்கலாம் என மருத்துவர் ஆஷா சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நோய்களில் கவனம் செலுத்தாததால், பலரது குடும்பத்தினர் அனைவரும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவருக்கு மூன்று நாட்களாக அதிக காய்ச்சல் இருந்தால், உடனடியாக முழு இரத்த எண்ணிக்கை மற்றும் NS1 ஆன்டிஜென் இரத்த பரிசோதனை செய்து நோயை கண்டறிய வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...