download 27 1 4
இலங்கைசெய்திகள்

நீர் பாவனை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை!

Share

நீர் பாவனை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிப்பதற்கும் சமைப்பதற்கும் மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கடுமையான வெப்பத்துடனான காலநிலை நீடித்து வருவதனால் நீரிற்கான தேவை வெகுவாக உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விவசாய செய்கைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என சபையின் பொது முகாமையாளர் வசந்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

நீர் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் உயரமான இடங்களுக்கு உரிய அழுத்தத்துடன் நீரை விநியோகிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் நீர் விநியோகத்தை வரையறுப்பதற்கு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...