வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வடக்கு கிழக்கு மீனவர்கள்

வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதால், மீன்பிடி மற்றும் கடற்றொழில்களில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமுள்ள மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் இன்று மாலை முதல் அதிகரிக்கக்கூடும்.

காலியில் இருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் ஆழமான மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்பில் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version