24 661af97d5905e
இலங்கைசெய்திகள்

காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Share

காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் அதிக வெப்பம் மற்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று(14.04.2024) வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை மட்டத்தை அடையுமென எதிர்வு கூறியுள்ளது.

இந்தநிலையில் வெப்ப பிடிப்புகள் மற்றும் வெப்ப சோர்வு தொடர்பில் வளிமண்டலத்திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதேநேரம் மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...