12 7
இலங்கைசெய்திகள்

வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் வாக்களிக்க முடியுமா: வெளியான தகவல்

Share

வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் வாக்களிக்க முடியுமா: வெளியான தகவல்

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் தபால் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.

நேற்றைய தினம் விசேட தினமாக அறிவிக்கப்பட்டு வாக்காளர் அட்டை விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

எவ்வாறெனினும், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியுமாயின் வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும் என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவும் தபால் திணைக்களமும் இணைந்து அதிகாரபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த வாக்காளர் அட்டைகள் கிடைத்தாலும் கிடைக்கப்பெறாவிட்டாலும் வாக்களிப்பதற்கு அது தடையாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வாக்காளர்களுக்கும் இந்த வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறும் என நாம் நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிலையம் எது என தெரிந்தால், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பித்து வாக்களிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டையின் மூலம் வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்காளர் எண்ணை அறிந்து கொள்ள வழியமைக்கும் என்ற போதிலும் அட்டை கிடைக்கப் பெறாமை தேர்தலில் வாக்களிப்பதற்கு பாரதூரமான தடையாக அமையாது என ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....