உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்ய நடவடிக்கை
உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு இவ்வாறு வேட்பு மனுக்களை இரத்து செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை இரத்து செய்வதற்கு மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவும் பரிந்துரை செய்திருந்தது.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்த அரச ஊழியர்கள் உள்ளிட்ட வேட்பாளர்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அந்த காரணிகளை கருத்திற்கொண்ட அரசாங்கம் வேட்பு மனுக்களை இரத்து செய்யத் தீர்மானித்துள்ளது.