tamilni 383 scaled
இலங்கைசெய்திகள்

ஊழல் புரிந்தவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதில் இலங்கை பின்னடைவு

Share

ஊழல் புரிந்தவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதில் இலங்கை பின்னடைவு

பொதுக் கொள்வனவுகளில் ஊழல் புரிந்தவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதில் தெற்காசிய நாடுகளில் மிக மோசமான பதிவை இலங்கை கொண்டுள்ளதாக வெரிட் ஆய்வின் புதிய அறிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொள்முதலின் போது ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது என்பதை அங்கீகரிக்காத தெற்காசியாவில் உள்ள ஒரே நாடு இலங்கை மட்டுமே என்றும் அந்த ஆய்வு காட்டுகிறது.

எனினும், மருந்து கொள்வனவு போன்ற சில நிகழ்வுகளைத் தவிர இலங்கையில் ஏறக்குறைய அனைத்து பொதுக் கொள்வனவுகளையும் நிர்வகிக்கும் 2006ஆம் ஆண்டின் கொள்முதல் வழிகாட்டுதல்களில் பாரிய இடைவெளிகள் உள்ளன.

எனவே ஊழலை எதிர்த்து நிதி நிர்வாகத்தை மீட்டெடுக்க இந்த இடைவெளிகளை அவசரமாக சரிசெய்வதன் முக்கியத்துவத்தை ஆய்வு அறிக்கை வலியுறுத்துகிறது.

கடனை கட்ட தவறிய ஒப்பந்தக்காரர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது மட்டுமல்லாமல், அவர்களின் பெயர்களை பொது இணையத்தள தரவுத்தளத்தில் வெளியிடவும் இலங்கையில் ஏற்பாடுகள் உள்ளன.

இருப்பினும், அரசத்துறையால் பராமரிக்கப்படும் இந்த தரவுத்தளத்தில் எவ்வித பதிவுகளும் இல்லை. இதற்கு நேர்மாறாக, ஜூலை 2023 நிலவரப்படி, நேபாளத்தின் இணைத்தள தரவுத்தளத்தில் 629 உள்ளீடுகளும், பங்களாதேசில் 510 பதிவுகளும் இருந்ததாக வெரிட் ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் இலங்கை மீதான சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகை கண்டறிதலின் கொள்வனவுகளில் உயர் மட்ட ஊழல்கள் சரிசெய்வதன் முக்கியத்துவம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமையை, வெரிட் ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...