Connect with us

அரசியல்

ஊழல்மோசடிகளின் ஓரங்கம்-சபாநாயகர் கடும் அதிருப்தி!

Published

on

download 26 1
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் செயற்பாடு, நாட்டின் முக்கிய பிரமுகர் என அழைக்கப்படும் சில தரப்பினரால் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஊழல்மோசடிகளின் ஒரு பகுதியேயாகும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரொருவர் 7 கோடியே 50 இலட்சம் பெறுமதியான மூன்றரை கிலோகிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுகள், ஆபரணங்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவந்தபோது கைதான சம்பவத்தை நாம் மிகவும் பாரதூரமான விடயமாகவே கருதுகின்றோம். இதுகுறித்து விசனமடையும் அதேவேளை, நாடு என்ற ரீதியில் வெட்கப்படவேண்டிய விடயமாகவும் நாம் இதனைக் கருதுகின்றோம்.
‘கௌரவ உறுப்பினர்’ என்று விழிக்கப்படும் ஒருவர் நாட்டின் முதன்மை விமானநிலையத்தின் முக்கிய பிரமுகர்களுக்கான முனையத்தைப் பயன்படுத்திச் செய்திருக்கும் இந்தச் செயலானது, நாட்டின் முக்கிய பிரமுகர் என அழைக்கப்படும் சில தரப்பினரால் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஊழல்மோசடிகளின் ஒரு பகுதி என்றே நாம் நம்புகின்றோம். இச்செயலின் விளைவாகக் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஒட்டுமொத்த பாராளுமன்றத்தையும் இழிவுபடுத்தியுள்ளார்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் கண்ணியம் மிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம்வகிப்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, இவர்களைப்போன்ற நபர்களின் செயல்களால் கண்ணியம் மிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இழிவுபடுத்தப்படுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மேலும் இந்தச்செயலை வெறுமனே சுங்கச்சட்டத்தை மீறிய செயலாக மாத்திரம் கருதமுடியாது. இதனூடாக நாட்டின் அந்நியச்செலாவணி சட்டங்களும் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்துக் கவனம்செலுத்தவேண்டும். அவ்வாறு மீறப்பட்டிருப்பின், அது பாரிய குற்றமாகும். ஆகையினால் நாட்டின் பொறுப்புடைய தரப்புக்கள் இதுகுறித்துக் கவனம் செலுத்தவேண்டிய அதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரின் தகுதி, தராதரங்களைப் பாராமல் சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
#srilankaNews
3 Comments
Advertisement

ஜோதிடம்

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்24 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2024, குரோதி வருடம் ஆடி 10 வெள்ளிக் கிழமை, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள மகம், பூரம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 25.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2024, குரோதி வருடம் ஆடி 9, வியாழக் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் பூரம், சஞ்சரிக்கிறார். கடகம், சிம்ம ராசியில் உள்ள...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 24.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூலை 24, 2024, குரோதி வருடம் ஆடி 8, புதன் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் பூரம், சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் உள்ள பூசம்,...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஜூலை 23, 2024, குரோதி வருடம் ஆடி 25, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை, புனர்பூசம்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 22.07.2024

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 22.07.2024 Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஜூலை 22, 2024 திங்கட் கிழமை) இன்று சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 21.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 21.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூலை 21, 2024, குரோதி வருடம் ஆடி...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் 20.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 20.07.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூலை 20, 2024, குரோதி வருடம் ஆடி...