tamilni 480 scaled
இலங்கைசெய்திகள்

அநுராதபுரம் மாணவர்களில் அதிகரிக்கும் பார்வைக் குறைபாடு

Share

அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை செல்லும் சிறுவர்களில் 60 வீதமானோர் பார்வைக் குறைபாடு உடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கண் மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் குஷானி குணரத்ன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் 12 கண்சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு, பார்வைக் குறைபாடுள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கும் வகையில் கண் மருத்துவர்கள் சங்கம் ஏற்பாடு செய்து செயற்படுத்தியதன் மூலம் இது தெரியவந்துள்ளது.

ஏனைய மாவட்டங்களிலும் அவ்வாறான கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்ட போதும், பார்வைத் திறன் குறைபாடுள்ள மாணவர்கள் பெருமளவில் கண்டறியப்படவில்லை.

அந்தவகையில், ஏனைய மாவட்டங்களை விட அநுராதபுரம் மாவட்டம் 60% பார்வையற்ற மாணவர்களைக் கொண்ட மாவட்டமாக தேசிய கண்மருத்துவமனை மருத்துவர் சங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...