tamilni 224 scaled
இலங்கைசெய்திகள்

விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் உத்தரவு

Share

விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை இன்று உடனடியாக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட வழக்கு தொடர்பாக பிரதிவாதி சமர்ப்பித்த ஆரம்ப ஆட்சேபனை மீதான உத்தரவுக்கு அமையவே நேற்று (12.12.2023) இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது

பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, தமது கட்சிக்காரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் அறிவித்தார்.

இதன்படி விமல் வீரவன்சவின் பிணைமுறிகள் நீதிமன்றில் முன்னிலையாகி உண்மைகளை உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பில் அவதானம் செலுத்திய நீதிபதி, மேற்படி மனுவை பிறப்பித்ததுடன், அவரது உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 5 வருடங்கள் அமைச்சராக இருந்த அவர் சொத்துக்கள் மற்றும் சம்பளத்தின் மூலம் சம்பாதிக்க முடியாத 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...