10 12
இலங்கைசெய்திகள்

ஜெனீவாவை தவிர்க்க கூடிய அன்றைய ஜே.வி.பியின் தீர்மானம்..!

Share

ஜே.வி.பியின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று ஜெனீவா செல்ல தேவையிருந்திருக்காது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழீழத்துக்கான இறுதி போர் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த ஒரு வாரத்தில் போரின் போது நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் உண்மை மற்றும் புனரமைப்பு தொடர்பிலான ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு ஜே.வி.பியின் சார்பில் நாம் கோரினோம்.

அந்த தேசிய ஆணைக்குழு அமைத்து அதன் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று ஜெனீவா தீர்மானம் வந்திருக்காது. யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்கள் நிடைவடைந்த நிலையில் நாங்கள் ஆட்சியை கைப்பற்றும் வரை அவை நடைபெற்றிருக்கவில்லை.

அதனால் உண்மை ஆணைக்குழு மற்றும் புனரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, குறித்த ஆணைக்குழுக்கள் மூலம் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் நீதியை பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.

இவற்றை நாம் மேற்கொள்வது ஜெனீவாவுக்கு காண்பிப்பதற்காகவல்ல. பல வருடங்களாக அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்ட கட்சி என்ற வகையில் மனித உரிமைகளை பாதுகாப்பது எமது கடமையாகும்.

அத்தோடு அனைத்து இனங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்பில் எமக்கிருக்கும் பற்றுதலாகும். எமது நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது, நீதியின் ஆதிபத்தியத்தை நிலைநாட்டுதல் மற்றும் சாமாதானத்தை ஏற்படுத்தி, நாட்டி இனி இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை முற்றாக ஒழிப்பது உங்களினதும் எங்களினதும் பொறுப்பாகும். எங்களால் மட்டும் இதை செய்யமுடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...