24 6650fd160334d
இலங்கைசெய்திகள்

ஆசியாவின் சிறந்த தலைவராக இன்றும் ரணில் : விஜயகலா

Share

ஆசியாவின் சிறந்த தலைவராக இன்றும் ரணில் : விஜயகலா

தேர்தலில் படுதோல்வியடைந்தும் இன்று ஒரு ஆசனத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickramesinghe) மக்களுக்கு சேவையாற்றுகின்றார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்(vijayakala Maheswaran) தெரிவித்துள்ளார்.

யாழ். (Jaffna) மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரச காணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“கடந்த 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் எமது நடவடிக்கை அமைதியாகவே இருந்தது.

கோவிட் இடர் மற்றும் கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பலர் எங்களிடம் இருந்து பிரிந்து போன நிலையிலும் நாங்கள் கட்சியினை விட்டு வெளியே போகவில்லை.

எமது ஜனாதிபதி ஆசியாவில் படித்த ஒரு சிறந்த தலைவர். அவர் தேசிய பட்டியலிலேயே நாடாளுமன்றம் சென்றார்.

கடந்த காலங்களில் பிழையாக நீங்கள் வாக்களித்ததன் காரணமாகவே பல பிழையான தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

அத்துடன், கடந்த கால அரச தலைவர்கள் கோட்டாபய போன்றவர்களால் நாடு சோமாலியாவாக மாறியது.

எமது தலைவர் கோவிட் காலத்தில் தடுப்பு மருந்தின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடாத்துமாறு கோரியிருந்தார்.

இருப்பினும், நடாத்தப்பட்ட தேர்தலினால் ஏற்பட்ட செலவீனம் தொடர்ச்சியாக ஆட்சி அமைத்தவர்களால் நாட்டினை கொண்டு செல்ல முடியாது போனது.

இன்று அனுர குமார திசாநாயக்க, சஜித் என பலர் தேர்தலில் போட்யிட வருகின்றார்கள். எனினும், அன்று பலர் அந்த பொறுப்பினை எடுக்கும் வாய்ப்பு இருந்த போதும் அதனை எடுக்கவில்லை.

எனவே, அடுத்த தேர்தல் எனது அரசியல் பயணத்தின் இறுதி தேர்தல் என்பதால் அந்த தருணத்திலிருந்து நானும் அரசியலை விட்டு விலகி விடுவேன் ”என அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...