tSHr7rVMDdNiBPrUkrs0
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

Share

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் அமைதியான முறையில் இன்று  கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்தப் போராட்டத்தினை தேசிய கிறிஸ்தவ மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில், அவர்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு அவர்கள் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நினைவு கூர்ந்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு கோரிக்கைகளை ஏந்திய பதாகைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டனர்.

“மலையக மக்கள் சுதந்திரமாக வாழ காணி வழங்கு” “மலையக மக்களை சிதைக்க வேண்டாம்”, “பதவிகளுக்கு மலையக மக்களை விற்காதே” , “மலையக மக்கள் சுதந்திரமாய் வாழ காணி கொடு” “தோட்ட வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட வேண்டும்” , “வியர்வை விதைத்த பூமி உழைப்பாளர்கள் உரிமையான பூமி”, போன்ற கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் சர்வ மத தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...