IMG 20230512 WA0001
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

Share
அரசின் கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிடப்ட்ட  கைதுகள் நிறுத்தப்படவேண்டும் எனவும் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பூசகரது கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால்  நேற்று மாலை 2:30 மணியளவில் வவுனியா நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்து.
இதன் பொழுது திட்டமிட்ட கைதுகளை உடனடியாக நிறுத்து ,வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்,வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து, தொல்லியல் திணைக்களமே அரசின் கைக்கூலியா,கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும், திருகோணமலை எங்கள் சொத்து ,அம்பாறை எங்கள் சொத்து , மட்டக்களப்பு எங்கள் சொத்து, யாழ்ப்பாணம் எங்கள் சொத்து, கிளிநொச்சி எங்கள் சொத்து, வவுனியா எங்கள் சொத்து, முல்லைத்தீவு எங்கள் சொத்து, மன்னார் எங்கள் சொத்து,வீரம் விளைந்த தேசம் காக்கிகளின் சலசலப்புக்கு அஞ்சாது, இராணுவமே வெளியேறு,மண்துறந்த புத்தருக்கா மண்மீது ஆசையா என்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட  வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர் கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...