சமூக ஊடகங்களில் பரவிய குழந்தை தாக்கப்படும் காணொளி: நபர்களுக்கு நேர்ந்த கதி

24 665fda953f1a3

சமூக ஊடகங்களில் பரவிய குழந்தை தாக்கப்படும் காணொளி: நபர்களுக்கு நேர்ந்த கதி

சமூக ஊடகங்களில் குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து காவல்துறையினர் விசாரணையை நேற்று (04) ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான 4 1/2 வயதுடைய குழந்தையும் காவல்துறை காவலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் தமது கடும் விசனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version