24 665fda953f1a3
இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்களில் பரவிய குழந்தை தாக்கப்படும் காணொளி: நபர்களுக்கு நேர்ந்த கதி

Share

சமூக ஊடகங்களில் பரவிய குழந்தை தாக்கப்படும் காணொளி: நபர்களுக்கு நேர்ந்த கதி

சமூக ஊடகங்களில் குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து காவல்துறையினர் விசாரணையை நேற்று (04) ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான 4 1/2 வயதுடைய குழந்தையும் காவல்துறை காவலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் தமது கடும் விசனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...