இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்களில் பரவிய குழந்தை தாக்கப்படும் காணொளி: நபர்களுக்கு நேர்ந்த கதி

Share
24 665fda953f1a3
Share

சமூக ஊடகங்களில் பரவிய குழந்தை தாக்கப்படும் காணொளி: நபர்களுக்கு நேர்ந்த கதி

சமூக ஊடகங்களில் குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து காவல்துறையினர் விசாரணையை நேற்று (04) ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான 4 1/2 வயதுடைய குழந்தையும் காவல்துறை காவலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் தமது கடும் விசனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...