24 665fcb34e7af3
இலங்கைசெய்திகள்

இரண்டாம் கட்ட அஸ்வெசும நலன்புரித் திட்டம்

Share

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் இம்மாதம் கோரப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் நேற்று (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுவதினை ஏற்றுக்கொள்கின்றோம் அத்தோடு இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் இம்மாதம் கோரப்படும்.

ஆகவே எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் தகவல் விண்ணப்பங்களின் உண்மை தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நலன்புரி கொடுப்பனவு வழங்கலில் கடந்த 30 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட தவறான வழிமுறைகள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் ஊடாக திருத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளை தீவிரப்படுத்தி நெருக்கடிகளை தீவிரப்படுத்த ஒருதரப்பினர் முயற்சிக்கின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...