24 667f7cfe0ff26 24
இலங்கைசெய்திகள்

சிறிலங்கா சுதந்திர கட்சியின் புதிய கூட்டணியில் இணைந்தார் வியாழேந்திரன்

Share

சிறிலங்கா சுதந்திர கட்சியின் புதிய கூட்டணியில் இணைந்தார் வியாழேந்திரன்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன்(viyalendran) சிறி லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவின் ஏற்பாட்டில் “நாட்டை வெல்லுங்கள் – எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் வெல்லவாயவில் நடைபெற்ற மக்கள் பேரணியிலேயே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் புதிய கூட்டணியில் இணைந்துகொண்டார்.

அத்துடன் தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்டத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கரவும் இந்த கூட்டணியில் இணைந்து கொண்டார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து நடத்தும் பொதுக் கூட்டத் தொடரின் இரண்டாவது பொதுக்கூட்டமே இன்று (29) மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva), மகிந்த அமரவீர(Mahinda Amaraweera), லசந்த அழகியவன்ன (Lasantha Alagiyawanna), துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake), ஜகத் புஷ்பகுமார (jagath Pushpakumara), அனுர பிரியதர்ஷன யாப்பா (Anura Priyadarshana Yapa), நிமல் லான்சா (Nimal Lanza), எஸ்.வியாழேந்திரன், ஜகத் பிரியங்கர (Jagath Priyankara,) உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மேயர்கள், பிராந்திய சபை உறுப்பினர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பினர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

அவரது அரசியல் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தொடங்கி பின்னர் மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவிற்கு மாறி தற்போது சுதந்திரகட்சியில் வந்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...