11 12
இலங்கை

விசா வழங்குவதற்காக கொழும்பில் அலுவலகம் நிறுவும் வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனம்

Share

விசா வழங்குவதற்காக கொழும்பில் அலுவலகம் நிறுவும் வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனம்

இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனம் அல்ஜீரியாவின் சார்பில் விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் அல்ஜீரியா வீசா விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்காக இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கையில் அலுவலகங்களை நிறுவியுள்ளது.

உலகின் பல அரசாங்கங்களின் சார்பில் இந்த நிறுவனம் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக அளவில் சுமார் 69 அரசாங்கங்களின் சார்பில் இந்த நிறுவனம் சேவை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து விதமான விசாக்களையும் வழங்கும் நோக்கில் புதுடெல்லி, மும்பை, சென்னை கொல்கொட்டா, ஹைதராபாத், காட்மண்டு மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை ஊடாக அல்ஜீரியாவிற்கு விசா கோரி விண்ணப்பம் செய்யும் இந்திய பிரஜைகளுக்கு இலகுவான சேவையை வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் காரியாலயங்கள் நிறுவப்பட்ட காரணத்தினால் பயணிகள் இலகுவாக விசாவை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஆறு நாட்களில் விசாவை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனத்திற்கு விசா விண்ணப்பங்களை கையாள்வதற்கு அனுமதித்த காரணத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட வழக்குகள் காரணமாக அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை இடை நிறுத்துமாறு இலங்கையின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...

7003785 rain
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மழை நீடிக்கும்: 5 மாவட்டங்களுக்குப் பலத்த மழை மற்றும் காற்று குறித்த எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்குப் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என...