24 6665521bf0db4
இலங்கைசெய்திகள்

வாகனம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

Share

வாகனம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கைக்கான வாகன இறக்குமதி ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(ranjith siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

அந்த அனுமதி பல கட்டங்களின் கீழ் வழங்கப்படும், அதன்படி ஒக்டோபர் மாதம் முதல் தொழிற்சாலைகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான இறக்குமதி தொடங்கப்படும். பின்னர், இரண்டாம் கட்டமாக முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

மூன்றாவது கட்டமாக, குறிப்பிட்ட வரம்பில் சிறிய கார்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும், நான்காம் கட்டமாக, அதாவது 2025ம் ஆண்டில் சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை புத்தம் புதிய வாகனங்கள் அல்லது இரண்டு வருடங்கள் பழமையான வாகனங்களே இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...