இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கான அனுமதி: அமைச்சர் தகவல்!

24 6637aa81e131d
Share

வாகன இறக்குமதிக்கான அனுமதி: அமைச்சர் தகவல்!

வாகன இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தடை, அடுத்த ஆண்டு முழுமையாக நீக்கப்படலாமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிகரிக்கும் டொலர் கையிருப்பு மற்றும் ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு வாகன இறக்குமதி தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை முறையாக நீக்குவதற்கான விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழு ஏற்கனவே அதன் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது இலங்கைக்கு (Sri Lanka) வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் முறைகேடுகள் காணப்படுவதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான முறைகேடுகளை தவிர்க்கவும் வாகன இறக்குமதிக்கான தரங்களை மேம்படுத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்றவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பிரச்சினைகளை நிவர்த்தி செய்ததன் பின்னர் டொலர் கையிருப்பு மற்றும் ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு இலங்கைக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கு அனுமதி வழங்கப்படலாமென நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...