வாகனங்களின் விலையில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் தகவல்
வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக அரசாங்கம் அடிக்கடி கூறுவது தொடர்பில் சந்தேகம் எழுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வாகனங்களின் இறக்குமதிக்கு அனுமதி கிடைத்தவுடன் விலைகள் உயரும் நிலை காணப்படுகிறது.
வாகன இறக்குமதி தொடர்பில் 4 வருடங்களாக காத்திருக்கின்றோம். விரைவில் கொண்டுவருவதாக கூறுகின்றார்கள்.
ஆனால் திகதி நேரத்தை கூறவில்லை. நாங்கள் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, அரசாங்கம் 200% வரி விதிக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.