24 66596cb147ea7
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் இலங்கை படையினர் குறித்து சர்ச்சை

Share

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் இலங்கை படையினர் குறித்து சர்ச்சை

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்கு பங்களாதேஷ் மற்றும், இலங்கையை சேர்ந்த சித்திரவதை மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகளில் ஈடுபட்ட அதிகாரிகளை அனுப்பியதாக குற்றஞ்சாட்டும் ஆவணப்படம் ஒன்று கடந்த வாரம் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து,ஐக்கிய நாடுகள் சபை, அமைதி காக்கும் படையினருக்கான அதன் திரையிடல் செயல்முறையை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் ஒலிபரப்பாளர் DW, ஸ்வீடனை தளமாகக் கொண்ட புலனாய்வு நிறுவனமான Netra News மற்றும் ஜேர்மன் செய்தித்தாள் Süddeutsche Zeitung ஆகியவற்றின் கூட்டு விசாரணையின்படி, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கூடிய அதிகாரிகளை அமைதி காக்கும் படையினராக அனுப்புவது தொடர்பில், “ஐக்கிய நாடுகள் சபை, கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக” குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழமையான ஊடக சந்திப்பில் ஆவணப்படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, ​ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் குற்றச்சாட்டுகளை அறிந்திருப்பதாகவும், ஆவணப்படத்தை அவர்கள் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

அமைதி காக்கும் திணைக்களத்தில் உள்ள தமது சகாக்களும் ஆவணப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகளுக்கான மரியாதை மற்றும் அர்ப்பணிப்பு உட்பட, செயல்திறன் மற்றும் ஒருமைப்பாட்டின் மிக உயர்ந்த தரத்தை பூர்த்தி செய்யும் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உறுதிபூண்டுள்ளது,

இதற்காக, பணியாளர்களின் மனித உரிமைகள் திரையிடல் கொள்கையின் கீழ் தொடர்புடைய நடைமுறைகள் மற்றும் வழிமுறைகளை நிறுவியுள்ளது என்றும் டுஜாரிக் வலியுறுத்தியுள்ளார்.

அமைதி காக்கும் படையினரின் திரையிடலில் மூன்று பகுதிகள் உள்ளன என்றும் பேச்சாளர் விளக்கினார்.

ஒன்று சுய சான்றிதழை உள்ளடக்கியது. இரண்டாவது அனுப்பும் நாட்டின் சான்றிதழை உள்ளடக்கியது.அத்துடன் இதில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் நடைமுறையும் உள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.

எனினும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குறித்த நாடுகளின் சீருடை அணிந்த பணியாளர்கள் பணியமர்த்தப்படாமல் போகலாம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையால் திருப்பி அனுப்பப்படலாம் என்று பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...