1 13
இலங்கைசெய்திகள்

தலைமைப் பதவியை துறக்கும் வாசுதேவ

Share

தலைமைப் பதவியை துறக்கும் வாசுதேவ

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தற்காலிகமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு தற்காலிகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரட்ன நியமிக்கப்பட உள்ளார்.

நிரோசன் பிரேமரட்னவை அதிகாரபூர்வமாக தலைமைப் பதவியில் அமர்த்தும் நிகழ்வு இன்றைய தினம் பத்தரமுல்ல பகுதியில் நடைபெறவுள்ளது.

கட்சியின் பணிகளை சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டியதன் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரட்னவை தலைமைப் பதவியில் அமர்த்துவதாக முன்னணியின் பிரதி செயலாளர் ஜே.டி.வீ திலகசிறி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...