17 3
இலங்கைசெய்திகள்

மோசடி வழக்கு: பிரதியமைச்சர் – மாநகர முதல்வரிடம் பெறப்படவுள்ள வாக்குமூலம்

Share

மோசடி வழக்கு தொடர்பாக, தொழில்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடுவெல மாநகர முதல்வர் ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்கிசை நீதவான் ஏ.டி. சதுரிகா டி சில்வா கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தொழிற்சங்க தேசிய தொழிலாளர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு கட்டிடத்தை, தொழிற்சங்க அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் மோசடி ஆவணங்களைப் பயன்படுத்தி 3.6 மில்லியன் ரூபாய்களுக்கு குத்தகைக்கு எடுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவை சந்தேக நபராகப் பெயரிடுமாறு பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பாக செய்யப்பட்ட கோரிக்கையின் மீது தீர்ப்பை வழங்குவதற்காகவே, இந்த வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் அமைச்சர் சமரசிங்கவிடமிருந்து ஏற்கனவே பெற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் 2025 ஜூலை 25 ஆம் திகதி வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...