டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
அமெரிக்க டொலரின் ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் (SPOT Exchange Rate) அதிகபட்ச பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம்(18.07.2023) அமெரிக்க டொலரின் ‘ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்’ 322.80 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 04, ஆம் திகதிக்கு பின்னர் பதிவான, அமெரிக்க டொலரின் ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்டின் (SPOT Exchange Rate) அதிகபட்ச பெறுமதி இதுவாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையிலும் நேற்று (18.07.2023) மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கி நேற்று வௌியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 314.95 ரூபாவாகவும் விற்பனை விலை 328.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் (17.07.2023) டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 313.29 மற்றும் 327.16 ரூபாவாக பதிவாகியிருந்தன.
இதற்கமைய நேற்று (18) அமெரிக்க டொலரின் ‘ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட்’ 322.80 ரூபாய் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் 319.12 ரூபாவாக ஸ்பொட் எக்ஸ்சேஞ்ச் ரேட் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
- breaking news sri lanka
- Central Bank of Sri Lanka
- cricket sri lanka
- Dollar to Sri Lankan Rupee
- Dollars
- english news
- Featured
- news from sri lanka
- sirasa news
- sri lanka
- Sri lanka economy
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news tamil
- sri lanka news tamil today
- sri lanka news today
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news live
- sri lanka tamil news today
- sri lanka tamil news today 2023
- sri lanka trending
- Sri Lankan Peoples
- Srilanka Tamil News
- tamil lanka news
- Tamil news
- tamil sri lanka news
- tv news
Leave a comment