24 660f3d0be7fd7
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறும் பெருந்தொகை மக்கள்!

Share

நாட்டை விட்டு வெளியேறும் பெருந்தொகை மக்கள்!

இந்த வருடத்தின் (2024) முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்(Sri Lanka Bureau of Foreign Employment )தெரிவித்துள்ளது.

இதேவேளை பெரும்பாலான இலங்கையர்கள் குவைத்(Kuwait) நாட்டிற்கு தொழிலுக்காக சென்றுள்ளனர் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39,900 எனவும், பெண்கள் 34,599 பேர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த புள்ளிவிபரங்களின்படி, இலங்கையர்கள் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தென் கொரியா(South Korea), இஸ்ரேல்(Israel) மற்றும் ஜப்பான்(Japan)போன்ற நாடுகளில் தொழில் தேடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.

இதன்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் மாத்திரம் தென் கொரியாவிற்கு 2,374 பேரும், இஸ்ரேலுக்கு 2,114 பேரும், ருமேனியாவிற்கு 1,899 பேரும் ஜப்பானுக்கு 1,947 பேரும் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...