1 10
இலங்கைசெய்திகள்

குடும்பத்துடன் நாட்டிலிருந்து வெளியேறிய உத்திக பிரேமரத்ன

Share

குடும்பத்துடன் நாட்டிலிருந்து வெளியேறிய உத்திக பிரேமரத்ன

அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் திட்டமிடப்பட்ட செயல் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கனேடிய குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உத்திக பிரேமரத்ன மற்றும் குறித்த பிரதேசத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் இணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு பொலிஸ் திணைக்களம் வழங்கிய உத்தியோகபூர்வ கடமை துப்பாக்கி என்றும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கைத்துப்பாக்கியை அரச ஆய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை கிடைத்தவுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படுவார்கள் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு தற்போது தனது குடும்பத்துடன் கனடாவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...