1 10
இலங்கைசெய்திகள்

குடும்பத்துடன் நாட்டிலிருந்து வெளியேறிய உத்திக பிரேமரத்ன

Share

குடும்பத்துடன் நாட்டிலிருந்து வெளியேறிய உத்திக பிரேமரத்ன

அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் திட்டமிடப்பட்ட செயல் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கனேடிய குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உத்திக பிரேமரத்ன மற்றும் குறித்த பிரதேசத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் இணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு பொலிஸ் திணைக்களம் வழங்கிய உத்தியோகபூர்வ கடமை துப்பாக்கி என்றும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கைத்துப்பாக்கியை அரச ஆய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை கிடைத்தவுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படுவார்கள் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு தற்போது தனது குடும்பத்துடன் கனடாவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...