1 10
இலங்கைசெய்திகள்

குடும்பத்துடன் நாட்டிலிருந்து வெளியேறிய உத்திக பிரேமரத்ன

Share

குடும்பத்துடன் நாட்டிலிருந்து வெளியேறிய உத்திக பிரேமரத்ன

அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் திட்டமிடப்பட்ட செயல் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கனேடிய குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உத்திக பிரேமரத்ன மற்றும் குறித்த பிரதேசத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் இணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு பொலிஸ் திணைக்களம் வழங்கிய உத்தியோகபூர்வ கடமை துப்பாக்கி என்றும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கைத்துப்பாக்கியை அரச ஆய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை கிடைத்தவுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படுவார்கள் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு தற்போது தனது குடும்பத்துடன் கனடாவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...

articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...