tamilnaadih 6 scaled
இலங்கைசெய்திகள்

பொருட்களின் விலை தொடர்பில் தகவல்

Share

பொருட்களின் விலை தொடர்பில் தகவல்

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெறும் போதும் இறக்குமதியாளர்கள் அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இலாபத்தை இலக்கு வைத்து அவர்கள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 5.6 சதவீதத்தால் வலுப்பெற்றுள்ளது.

தற்போது நாட்டின் வணிக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 305 ரூபா 64 சதமாக பதிவாகியுள்ள நிலையில், அதன் கொள்முதல் விலை 300 ரூபா 60 சதமாகவும் மற்றும் விற்பனை விலை 310 ரூபா 20 சதமாகவும் காணப்படுகிறது.

அதன்படி கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 12.1 சதவீதமாகவும், இந்த வருடத்தின் மூன்று மாதங்களில் ரூபாயின் பெறுமதி 5.6 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

எனினும் ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் பயனை தம்மால் அனுபவிக்க முடியவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மக்கள் கூறுகையில், கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்ட அளவுகளில் தற்போது பொருட்களின் விலைகள் குறைகின்றதா என பார்த்தால் அது சந்தேகமே. பாதணிகள் கூட ஆயிரம் ரூபாவிற்கு கொள்வனவு செய்த காலம் உள்ளது.

எனினும் தற்போது அது 3500 ரூபாவாக மாறியுள்ளது. எமது சம்பளத்துடன் இந்த விலைகளை ஒப்பிட்டு பார்க்கும் போது மாதாந்தம் வாழ்க்கையை நடத்திச் செல்வது கடினமாக உள்ளது.

மக்கள் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஓடுவது இதனால் தான் என குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...