21 9
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கை கொடுக்கப்போகும் அமெரிக்கா

Share

இலங்கைக்கு கை கொடுக்கப்போகும் அமெரிக்கா

இலங்கையின்(sri lanka) எரிசக்தி துறையின் அபிவிருத்திக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க(us) அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளமை மிகுந்த நம்பிக்கையளிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்(julie chung) தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியை(Kumara Jayakody )இன்று (9) கொழும்பு 7 இல் அமைந்துள்ள எரிசக்தி அமைச்சில் சந்தித்த போதே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் சிறப்பு நண்பன் என்ற வகையில் அமெரிக்காவின் நட்புறவையும் ஆதரவையும் தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தலைமையிலான அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் அசோக ரன்வலவை சந்தித்தனர்.

தூதுக்குழுவில் அமெரிக்க அபிவிருத்தி முகமையின் (USAID) ஆசிய பணியகத்தின் துணை உதவி நிர்வாகி அஞ்சலி கவுர் மற்றும் அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் ஆசியாவிற்கான துணைச் செயலாளர் ரொபேட் கப்ரோத் ஆகியோர் அடங்குவர்.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...