24 664576d855e7c
இலங்கைசெய்திகள்

பால்டிமோர் கப்பல் விபத்து : 50 நாட்களாக கப்பலுக்குள் இந்திய மற்றும் இலங்கை பணியாளர்கள்

Share

பால்டிமோர் கப்பல் விபத்து : 50 நாட்களாக கப்பலுக்குள் இந்திய மற்றும் இலங்கை பணியாளர்கள்

அமெரிக்க பால்டிமோரில் (America – Baltimore) தொழில்நுட்ப பிரச்சினையால் சரக்குக் கப்பல் கடல் பாலத்தில் மோதிய சம்பவம் இடம்பெற்று 50 நாட்களாகியும், சரக்கு கப்பலில் உள்ள பணியாளர்கள் தொடர்ந்தும் கப்பலிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய மற்றும் இலங்கை பணியாளர்களான இந்த 21 பேரும் விசாரணை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் தொலைபேசிகளும் அமெரிக்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முன்னதாக குறித்த சம்பவத்தில் உயிரிழந்த 06 கட்டுமானத் தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பேரழிவுக்கு கப்பல் பணியாளர்கள் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பேற்கவேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றமை தொடர்பில் பணியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக இவர்களில் சிலரின் மனவுறுதி புரிந்துகொள்ளக்கூடிய வகையில் குறைந்துள்ளதாக கடற்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...