11 16
இலங்கைசெய்திகள்

அமெரிக்க மெம்பிஸ் விலங்கினச்சாலையின் ஆராய்ச்சி நிலையம் இலங்கையில்

Share

அமெரிக்க மெம்பிஸ் விலங்கினச்சாலையின் ஆராய்ச்சி நிலையம் இலங்கையில்

அமெரிக்காவின் மெம்பிஸ் (Memphis) விலங்கினச்சாலை, இலங்கையில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் ஆராய்ச்சி நிலையத்தை இலங்கையில் செயற்பட வைப்பதே மெம்பிஸ் விலங்கினச்சாலையின் இலக்காகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் நவம்பரில் ஒரு முறையான திறப்பு நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையம் உயிரினங்களின் ஆராய்ச்சி, பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஒரு தளத்தை வழங்கும், மேலும் உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுக்கான ஆதாரமாக செயற்படும் என்று அமெரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் இலங்கை, வெப்பமண்டல காலநிலை மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பு ஆகியவற்றை கொண்டிருப்பதன் காரணமாக, பல்லுயிர் பன்முகத்தன்மையை கொண்டுள்ளது.

இருப்பினும் காடழிப்பு மற்றும் நில மாற்றம் இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை அச்சுறுத்துவதாக மெம்பிஸ் கருதுகிறது.

இந்தநிலையில், இலங்கையின் பல்லுயிர் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் தொடர்பிலேயே மெம்பிஸின் இலங்கை நிலையம் செயற்படவுள்ளது.

Share
தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...