3 31
இலங்கைசெய்திகள்

இலங்கை செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள பயண எச்சரிக்கை

Share

இலங்கை உட்பட இந்திய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுக்கு, அமெரிக்கா இரண்டாம் நிலை பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இந்த பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளன.

சிக்கன் குன்யா நோய் பரவல் காரணமாக, இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையை தவிர, சோமாலியா, மொரிஷியஸ், மயோட் மற்றும் ரீயூனியன் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இந்தப் பயண ஆலோசனை அமலில் உள்ளதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் இயக்குநர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸைப் பரப்பும் கொசுக்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தவும், நீண்ட கை சட்டைகள் மற்றும் நீண்ட ஆடைகளை அணியவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

முக்கிய கர்ப்பிணி பெண்கள் அந்தப் பகுதிகளுக்கு பயணம் செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிக காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, அரிப்பு மற்றும் சோர்வு ஆகியவை அறிகுறிகளில் அடங்கும் எனவும் இது நரம்பு மற்றும் இதயத்தை பாதித்து மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடும் என பயண ஆலோசனையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...