3 31
இலங்கைசெய்திகள்

இலங்கை செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள பயண எச்சரிக்கை

Share

இலங்கை உட்பட இந்திய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுக்கு, அமெரிக்கா இரண்டாம் நிலை பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இந்த பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளன.

சிக்கன் குன்யா நோய் பரவல் காரணமாக, இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையை தவிர, சோமாலியா, மொரிஷியஸ், மயோட் மற்றும் ரீயூனியன் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இந்தப் பயண ஆலோசனை அமலில் உள்ளதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் இயக்குநர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸைப் பரப்பும் கொசுக்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தவும், நீண்ட கை சட்டைகள் மற்றும் நீண்ட ஆடைகளை அணியவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

முக்கிய கர்ப்பிணி பெண்கள் அந்தப் பகுதிகளுக்கு பயணம் செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிக காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, அரிப்பு மற்றும் சோர்வு ஆகியவை அறிகுறிகளில் அடங்கும் எனவும் இது நரம்பு மற்றும் இதயத்தை பாதித்து மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடும் என பயண ஆலோசனையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...