anura
அரசியல்இலங்கைசெய்திகள்

அநுரவுடன் அமெரிக்கத் தூதுவர் திடீர் சந்திப்பு!

Share

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியுன் சங், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பியைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார்.

இன்று பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் அமெரிக்கத் தூதுவருடன் சந்திப்பு இடம்பெற்றது எனவும், நாட்டின் நடப்பு அரசியல் நிலைமைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடி குறித்தும் இதன்போது கருத்துப் பரிமாறிக்கொள்ளப்பட்டது எனவும் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

“பொருளாதார நெருக்கடிக்கு நிலையான, உள்ளடக்கிய தீர்வுகளை நோக்கி நகரும் இலங்கை அரசின் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக நான் பலதரப்பட்ட அரசியல் பிரதிநிதிகளைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றேன். அந்தவகையில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் மிக அவசரமான சவால்கள் குறித்து விவாதிக்க நான் அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தேன்” என்று அமெரிக்கத் தூதுவர் தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...