26 1
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த அமெரிக்க தூதுவர்

Share

இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட தமது அண்மைய விஜயங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் திறமையின்மையை விமர்சித்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதியன்று, நியூயோர்க்கின் (New York) காசில்டன் கோர்னர்ஸில் உள்ள ஸ்டேட்டன் தீவு இந்துக் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட வேளை தீவில் உள்ள தமிழ் அமெரிக்க சமூகத்தைச் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கையில் ஜனநாயகம், பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் சீர்திருத்தத்தை மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகளை மையமாகக் கொண்டு ஜூலி சங் உரை நிகழ்த்தினார்.

அத்துடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கிற்கு தாம் மேற்கொண்ட பல விஜயங்களை அவர் எடுத்துரைத்தார்.

குறிப்பாக மே 18 அன்று யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட தமது அண்மைய விஜயத்தையும் அவர் நினைவூட்டினார்.

தமது விஜயங்களின் போது, முன்னாள் போர் வலயங்களில் குறிப்பிடத்தக்க இராணுவ பிரசன்னம், பயங்கரவாதத் தடைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் ஆகியவற்றை தாம் அவதானித்ததாக குறிப்பிட்ட சங் காணாமல் போனோர் அலுவலகத்தின் திறமையின்மையையும் அவர் விமர்சித்தார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மையத்தை நிறுவுதல், மத்திய கிழக்கில் ஒரு புதிய மையத்திற்கான திட்டங்கள் உட்பட பல்வேறு முயற்சிகள் குறித்தும் சங் அங்கு விவாதித்தார்.

விரைவில் யாழ்ப்பாணத்தில் ஆங்கிலம் கற்பிக்க தன்னார்வலர்களை அமெரிக்கா அனுப்பும் என்றும் ஜூலி சங் தெரிவித்தார்.

மேலும், வலுவான ஜனநாயகத்தை பேணுதல், கடல் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் என்ற மூன்று முக்கிய மூலோபாய நலன்களையே அமெரிக்கா இலங்கையில் விரும்புகிறது என்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...