26 1
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த அமெரிக்க தூதுவர்

Share

இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட தமது அண்மைய விஜயங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் திறமையின்மையை விமர்சித்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதியன்று, நியூயோர்க்கின் (New York) காசில்டன் கோர்னர்ஸில் உள்ள ஸ்டேட்டன் தீவு இந்துக் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட வேளை தீவில் உள்ள தமிழ் அமெரிக்க சமூகத்தைச் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கையில் ஜனநாயகம், பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் சீர்திருத்தத்தை மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகளை மையமாகக் கொண்டு ஜூலி சங் உரை நிகழ்த்தினார்.

அத்துடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கிற்கு தாம் மேற்கொண்ட பல விஜயங்களை அவர் எடுத்துரைத்தார்.

குறிப்பாக மே 18 அன்று யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட தமது அண்மைய விஜயத்தையும் அவர் நினைவூட்டினார்.

தமது விஜயங்களின் போது, முன்னாள் போர் வலயங்களில் குறிப்பிடத்தக்க இராணுவ பிரசன்னம், பயங்கரவாதத் தடைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் ஆகியவற்றை தாம் அவதானித்ததாக குறிப்பிட்ட சங் காணாமல் போனோர் அலுவலகத்தின் திறமையின்மையையும் அவர் விமர்சித்தார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மையத்தை நிறுவுதல், மத்திய கிழக்கில் ஒரு புதிய மையத்திற்கான திட்டங்கள் உட்பட பல்வேறு முயற்சிகள் குறித்தும் சங் அங்கு விவாதித்தார்.

விரைவில் யாழ்ப்பாணத்தில் ஆங்கிலம் கற்பிக்க தன்னார்வலர்களை அமெரிக்கா அனுப்பும் என்றும் ஜூலி சங் தெரிவித்தார்.

மேலும், வலுவான ஜனநாயகத்தை பேணுதல், கடல் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் என்ற மூன்று முக்கிய மூலோபாய நலன்களையே அமெரிக்கா இலங்கையில் விரும்புகிறது என்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...