IMG 20230516 WA0011
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊர்திப் பவனி ஐந்தாவது நாள் யாழில் பயணம்!

Share
தமிழ் இனப்படுகொலையின் நினைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊர்திப் பவனி ஐந்தாவது நாளாக யாழ்ப்பாணம் நகர்  மற்றும் நல்லூர் பகுதிகளில் பயணித்தது.
ஊர்திபவனி யாழ் நகரில் தரித்திருந்தபோது பொதுமக்கள் பலரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
  2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருவதோடு 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்திலே மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெறுவது வழக்கம்.
இதன் ஒரு அங்கமாக தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும்  முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை  நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ம் திகதி தொடங்கப்பட்டது.
குறித்த ஊர்தி வடக்கின் ஐந்து மாவட்டங்கள் ஊடாகவும் பயணித்து இறுதியில் முள்ளிவாய்க்காலை அடையவுள்ளது.
 IMG 20230516 WA0011 1 IMG 20230516 WA0014 download 2
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 10 2
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் டிக்டாக் தடை நீங்கியது! புதிய சுயாதீன ஒப்பந்தம் மூலம் தீர்வு!

அமெரிக்காவில் பில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டிக்டாக் (TikTok) செயலிக்கு விதிக்கப்படவிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்...

MediaFile 9 2
இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் வரும் டி20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான அறிவிப்பு!

இலங்கை மற்றும் இந்திய மண்ணில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 10-ஆவது ஐசிசி (ICC) டி20 உலகக்கிண்ணக்...

IMG 20260123 WA0000
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: போதைப்பொருளுடன் மேலும் ஒரு இளைஞர் கைது!

ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, கொழும்பு 13 பகுதியைச்...

Jhonson
இலங்கைசெய்திகள்

சதொச லொறி மோசடி: ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரு மகன்களுக்கு ஜனவரி 30 வரை விளக்கமறியல் நீடிப்பு!

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச (Sathosa) நிறுவனத்திற்குச் சொந்தமான...