10
இலங்கைசெய்திகள்

இந்தியாவுடன் வர்த்தக உறவை பலப்படுத்த இலங்கைக்கு அவசர அழைப்பு!

Share

இந்தியாவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க, சமீபத்தில் முடிவடைந்த பிரித்தானிய – இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து (FTA) இலங்கை பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் இந்திய – இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சபை கூறியுள்ளது.

மேலும், இதேபோன்ற இருதரப்பு ஒப்பந்தத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

பிரித்தானிய பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 4.8 பில்லியன் யூரோவை சேர்க்கும் அதே வேளையில், இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான சந்தை அணுகல் மற்றும் முதலீடுகளுக்கான கதவுகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அறிவித்துள்ளது.

பிரித்தானிய – இந்தியா FTA-வை மேற்கோள் காட்டி, இலங்கை அதன் புவியியல் அருகாமை மற்றும் இந்தியாவுடனான தற்போதைய உறவுகள் காரணமாக இன்னும் அதிக இலாபம் ஈட்டும் என்று குறித்த சபை தெரிவித்துள்ளது.

“நன்கு கட்டமைக்கப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலம் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு.

இந்தியாவுடன் ஈடுபடுவதற்கு இலங்கை , பிரித்தானியாவை விட புவியியல் ரீதியாக மிகவும் சிறந்த நிலையில் உள்ளது.

நாங்கள் நெருக்கமான கலாச்சார, வரலாற்று மற்றும் பொருளாதார உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம்,

மேலும் இந்தியா எங்கள் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது,” என்று குறித்த சபை தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...

Romance Scams in Canada 1024x560 1
செய்திகள்உலகம்

கனடா ஒன்றாரியோவில் மோசடிகள் அதிகரிப்பு: நோர்த் பேயில் ஒருவரிடம் $250,000 மோசடி – காவல்துறை எச்சரிக்கை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த...

images 9
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இரசாயனம் கலந்த நீர்த்தாரை தாக்குதல்: 3 இலங்கை பணியாளர்கள் பாதிப்பு – பாதுகாப்பிற்கு தூதரகம் கோரிக்கை!

இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட இரசாயனம் கலந்த நீர்த்தாரைப் பிரயோகத்தின் (Chemical Spray/Water...

images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...