இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊரெழுவில் மாயமான குடும்பஸ்தர் பாழடைந்த அறையில் சடலமாக மீட்பு!

Share
நீர்த்தாங்கியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
Share

யாழ்ப்பாணம், ஊரெழுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி ஊரெழுவில் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், காணாமல்போயிருந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஊரெழு கிழக்குப் பகுதியிலுள்ள பாழடைந்த அறையில் இருந்தே இவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் இணுவில் பகுதியைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகளின் தந்தையான தங்கராசா உஷாந்தன் (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி, சடலம் மீதான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன. மேலதிக விசாரணைகளைக் கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...